உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி

 10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி

அச்சிறுபாக்கம்: களத்துார் ஊராட்சியில் ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக திறக்கப் படாமல், வீணாகி வருகிறது. அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், ஜே.ஜே., நகர் குடியிருப்பு பகுதி மக்களின் தேவைக்காக, கரசங்கால்- கொங்கரை சாலையில், 2015 --- 16ம் ஆண்டில், 6.30 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப் பட்டது. கட்டடம் கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், கட்டடத்தை திறக்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது, 2 கி.மீ., துாரம் சென்று, வேறு இடத்தில் உள்ள கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வர, முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடையை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி