தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த சாமியார் கேட் - பேரமனுார் ரயில்வே கேட் இடையே ரயில்வே தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. தாம்பரம் ரயில்வே போலீசார், அந்த உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். விசாரித்ததில், இறந்த நபர் செங்கல்பட்டு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 30, என தெரிந்தது. இவர் பேரமனுாரில் உள்ள தன் நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு காரணமா என, ரயில்வே போலீசார் விசாரிகின்றனர்.