உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாசி முதல் முகூர்த்த நாள் திருப்போரூரில் கூட்டம்

மாசி முதல் முகூர்த்த நாள் திருப்போரூரில் கூட்டம்

திருப்போரூர்:திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாள், விசேஷ நாட்களில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினம் மாசி மாத முதல் முகூர்த்த நாளாகவும், விடுமுறை நாளாகவும் வந்ததால், கந்தசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. தவிர, திருப்போரூர் உள்ளிட்ட மற்ற ஊர்களில் திருமணம் முடித்தோரும், கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.அதேபோல் பக்தர்கள், மொட்டை அடித்தல், காது குத்துதல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை