உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக சென்ற மின்கம்பிகள் புது கம்பம் நட்டு உயர்த்தி அமைப்பு

தாழ்வாக சென்ற மின்கம்பிகள் புது கம்பம் நட்டு உயர்த்தி அமைப்பு

பவுஞ்சூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கீழக்கண்டை கிராமத்தில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள், புதிய மின்கம்பம் நட்டு, உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளன.பவுஞ்சூர் அருகே கீழக்கண்டை ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களுக்கு, ஜமீன் எண்டத்துார் துணை மின் நிலையம் வாயிலாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில், கீழக்கண்டை காலனி பகுதியில் உள்ள சிறுபாலம் அருகே, குடியிருப்பு பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக சென்றதால், கிராம மக்கள் விபத்து அச்சத்துடன் சென்று வந்தனர்.மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கும்படி, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, மின்வாரிய துறையினர் புதிய மின்கம்பம் நட்டு, விபத்து ஏற்படுத்தும் நிலையில் தாழ்வாக சென்ற மின் கம்பிகளை உயர்த்தி அமைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை