உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பண்ணைசாரா நீண்ட கால நிலுவைக்கு கடன் தீர்வு திட்டம்

பண்ணைசாரா நீண்ட கால நிலுவைக்கு கடன் தீர்வு திட்டம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களில் வசூலாகாமல் உள்ள, தவணை தவறிய பண்ணை சாரா கடன்களுக்கான, சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்.இதுகுறித்த அவரது அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக சிறுவணிக கடன், தொழிற்கடன், வீட்டு வசதிக்கடன் உள்ளிட்ட, பண்ணைசாரா கடன்கள் வழங்கப்பட்டன.இந்த கடன்கள், அத்துடன் வேளாண் உற்பத்தியாளர்கள், வேளாண் விளை பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் விற்பனை செய்த வகையில், உறுப்பினர்களிடம் இருந்து வரவேண்டிய இனங்கள் ஆகியவற்றில், 2022 டிச., 31ல் முழுமையாக தவணை தவறிய நிலுவையிலுள்ள கடன்களுக்கு, சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கடனை தீர்வு செய்ய கடந்த செப்., 12ம் தேதிக்கு முன், 25 சதவீதம் செலுத்தி ஒப்பந்தம் செய்யாதவர்கள், ஒப்பந்தம் செய்து, எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவர்கள், தற்போது மொத்த தொகையையும் ஒரே தவணையில் செலுத்தி, கடனை தீர்வு செய்து கொள்ளலாம்.இதுமட்டுமின்றி, 2022 டிச., 31ம் தேதி முழுமையாக தவணை தவறி, மூன்றாண்டுகளுக்கு மேலான தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள், மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள்.சிறுதொழில் கடன்கள், மகளிர் தொழில் முனைவோர் கடன்களையும், தீர்வு செய்யும் நாள் வரையில், 9 சதவீதம் சாதாரண வட்டியுடன், நிலுவை தொகையை வரும் 2025 மார்ச் 12ம் தேதிக்குள், ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம்.தவணை தவறிய அக்கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ