உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 7ம் தேதி நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 7ம் தேதி நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 7ம் தேதி, நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வழக்கமாக, காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல், இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும். இந்நிலையில் வரும் 7ம் தேதி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, வரும் 7ம் தேதி, காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். அதன் பின், மறுநாள் 8ம் தேதி காலை 6:00 மணிக்கே நடை திறக்கப்படும். தொடர்ந்து வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !