உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தபால் சேவை 2ம் தேதி நிறுத்தம்

தபால் சேவை 2ம் தேதி நிறுத்தம்

செங்கல்பட்டு, அனைத்து தபால் நிலையங்களிலும், மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பணிகள் நடப்பதால், வரும் 2ம் தேதி, தபால் நிலையங்கள் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை: செங்கல்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களில், மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பணி, நடக்கிறது. மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல் படுத்த, வரும் ஆக., 2ம் தேதி பரிவர்த்தனைகள் இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இந்த குறுகிய சேவை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை