உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருப்போரூர், திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தை மாத பிரதோஷமான நேற்று, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.பிரதோஷத்தையொட்டி, மாலை 6:00 மணியளவில், சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். அதேபோல், செம்பாக்கம், செங்கண்மால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை