மேலும் செய்திகள்
அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இப்போதெல்லாம் அம்பேத்கர்... அம்பேத்கர்.. என பேசுவது 'பேஷன்' ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்' என, ராஜ்ய சபாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமித் ஷாவை கண்டித்து, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாமல்லபுரத்தில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் காங்., முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று, அமித் ஷாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
20-Dec-2024