உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வில்லியம்பாக்கம் கோவில் குளம் துார் வார கிராமத்தினர் கோரிக்கை

வில்லியம்பாக்கம் கோவில் குளம் துார் வார கிராமத்தினர் கோரிக்கை

வில்லியம்பாக்கம்::வில்லியம்பாக்கம் கோவில் குளத்தை துார் வார வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தின் மையப்பகுதியில், பழமையான சொர்ணாம்பிகை சமேத தொக்கீஸ்வர் கோவில் உள்ளது.கோவிலின் முன்பக்கத்தில், திருக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு செல்லும் நீர் வரத்து கால்வாய்கள் துார் வாரப்படாமல் உள்ளதால், தற்போது குளத்தில், போதிய அளவு தண்ணீர் இல்லை.'பெஞ்சல்' புயலின் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால், இதே பகுதியில் வில்லியம்பாக்கம் - சாஸ்திரம்பாக்கம் சாலையில் நீஞ்சல் மடுவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, பாலாற்றில் கலந்தது.ஆனால், இந்த குளம் நிரம்பவில்லை. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த குளம் மற்றும் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை முறையாக துார் வார வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !