செய்யூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சார் - பதிவாளரை நியமிக்க கோரிக்கை
செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் மாவட்ட கிளை நுாலகம் அருகே, சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்கு வீடு, நிலம் வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் 'செட்டில்மென்ட்' போன்ற 50 முதல் 80 பத்திரங்கள் வரை தினமும் பதிவு செய்யப்படுகின்றன.இங்கு சார் - பதிவாளராக பணியாற்றி வந்த பசுபதி, கடந்த ஆண்டு டிச., 31ம் தேதி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.புதிய சார் - பதிவாளர் நியமனம் செய்யப்படாமல் உள்ளதால், தற்போது பத்திர பதிவு செய்ய, தலைமை எழுத்தர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.சார் - பதிவாளர் இல்லாத காரணத்தால் பத்திர நகல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், செய்யூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர சார் - பதிவாளரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.