உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் மலைக்கோவில் அடிவாரம் அருகே, அடுத்தடுத்து இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த இரண்டு அங்கன்வாடி மையங்களிலும், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாமல், திறந்தவெளியாக இருந்தது.இதனால், மதுபிரியர்கள் அங்கு அமர்ந்து குடித்துவிட்டு, காலி பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்கின்றனர்.அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு வந்ததும், மதுபாட்டில்களை அப்புறப்படுத்துவதே தினசரி பணியாக உள்ளது.எனவே, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் நலன் கருதி, இவ்விரு மையங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணியாக பள்ளம் எடுக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் அடுத்தகட்ட பணிகள் துவங்கப்படவில்லை. சுற்றுச்சுவர் அமைக்க்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !