ஆப்பூர் சாலையில் வேகத்தடை புதிதாக அமைக்க கோரிக்கை
மறைமலைநகர்:மறைமலைநகர் - ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை திருக்கச்சூர், பேரமனுார், சட்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியின் இருபுறமும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, கடந்த 2023ம் ஆண்டு வேகத்தடை அமைக்கப்பட்டது.தற்போது இந்த பிளாஸ்டிக் வேகத்தடைகள் உடைந்து சிறு சிறு துண்டுகளாகி, வாகனங்களின் 'டயர்'களை பதம் பார்க்கின்றன.எனவே, இந்த பகுதியில் உள்ள பழைய 'பிளாஸ்டிக்' வேகத்தடையை அகற்றி விட்டு, புதிதாக வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.