மேலும் செய்திகள்
சீக்கனாங்குப்பத்தில் கால்வாய் பணி
10-Dec-2024
சித்தாமூர்:சித்தாமூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்பகுதி மக்கள், சாலை ஓரத்தில் வெளியேற்றுகின்றனர்.இதனால், சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.மேலும், கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாவதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குடியிருப்புகளில் தனித்தனியே கழிவுநீர் தொட்டி அமைத்து கழிவுநீரை தொட்டியில் வெளியேற்ற, பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
10-Dec-2024