உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., நிர்வாகிக்கு காப்பு

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., நிர்வாகிக்கு காப்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுாரில் வசிப்பவர் பாஸ்கர், 38. இவர், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலராக உள்ளார். இவரின் மனைவி, ஒன்பதாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.இந்நிலையில், இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், கணவனை இழந்த பெண்ணை, மூன்று மாதங்களாக பாலியல்ரீதியாக துன்புறுத்திவந்துள்ளார்.மேலும், இதை வெளியில் யாரிடமும் சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், நேற்று மாலை புகார் அளித்தார்.அதன்படி, வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக இருந்த பாஸ்கரை கைது செய்த போலீசார், நேற்று இரவு செங்கல்பட்டு சிறையில்அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை