உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரியகயப்பாக்கம் பள்ளி வளாகத்தை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சித்தாமூர்,:பெரியகயப்பாக்கத்தில், செடிகள் வளர்ந்துள்ள அரசு பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்த வளாகம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, பள்ளி வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை