உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவாதுார் ஊராட்சியில் 2 புது அங்கன்வாடிகள் அமைக்க டெண்டர்

திருவாதுார் ஊராட்சியில் 2 புது அங்கன்வாடிகள் அமைக்க டெண்டர்

பவுஞ்சூர், பவுஞ்சூர் அருகே உள்ள திருவாதுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இதில் 12 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயன்று வருகின்றனர். கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.இங்குள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது நாளடைவில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதேபோல, திருவாதுார் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திற்கும், புதிய கட்டடம் வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 2025 - 26 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், தலா 17.25 லட்சம் மதிப்பீட்டில், திருவாதுார் ஊராட்சியில் இரண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி