உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

செங்கை ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, ஜே.சி.கே., நகரில் கட்டப்பட்ட, ரேஷன் கடை புதிய கட்டடத்தை திறக்காததால் வீணாகி வருகிறது.செங்கல்பட்டு நகராட்சி, ஜே.சி.கே., நகரில், தனியார் வாடகை கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி ருவருகிறது. இங்கு இடவசதி இல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புதிய ரேஷன் கடை கட்ட, 2021-22ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த புதிய கட்டடத்தை, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளனர்.இதன் காரணமாக தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.பகுதிவாசிகள் நலன் கருதி, ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V Venkatachalam
மே 30, 2025 13:16

இதில் ரொம்ப விஷேசம் என்னான்னா, ஒன்றரை வருடத்துக்குள் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. 7 லட்சம் யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்? இன்னொரு 7 லட்சம் லவட்டி இன்னொரு கட்டிடம் கட்டி அதிலும் பங்கு போட்டுக்கலாம். யார் அப்பன் வீட்டுப் பணம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை