சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்
ப வுஞ்சூர் அருகே லத்துார் கிராமத்தில் இருந்து புன்னமை செல்லும் சாலை பராமரிப்பின்றி, ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் நடந்து செல்வோர், மிதிவண்டியில் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அடிக்கடி தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - த. கர்ணன், பவுஞ்சூர்.