உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களால் இடையூறு

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களால் இடையூறு

திருப்போரூர், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி திருப்போரூரில், பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கிளாம்பாக்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தை ஒட்டி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இது, தனியாருக்கு ஏலம் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு, தினமும் 150 முதல் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.ஆனாலும், பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்போரூர் வந்து, அங்கிருந்து சென்னை செல்பவர்கள், வணிக கடைகளுக்கு வருபவர்கள் என பலரும், தங்களது வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல், பேருந்து நிலையத்தில் நிறுத்துகின்றனர்.இதனால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வரும் போதும், வெளியேறும் போதும் இடையூறு ஏற்படுகிறது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு அறிவிப்பு பலகை, இரும்பு தடுப்பு அமைத்தாலும், இருசக்கர வாகனங்களை இடையூறாக நிறுத்திவிட்டுச் செல்வது தொடர்கிறது.எனவே, பேருந்து நிலையத்தில் இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை