உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புறக்காவல் நிலையத்தில் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்

செங்கை புறக்காவல் நிலையத்தில் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறவழிச்சாலை - காஞ்சிபுரம் சாலை மேம்பாலம் அருகில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன. மேலும், செங்கல்பட்டு நகர பகுதிகளுக்குள், தொழிற்சாலை பணியாளர்கள் செல்லும் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.அதனால், இந்த பகுதி மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆண்கள் மற்றும் இளம்பெண்கள், இந்த பகுதியில் காத்திருந்து, காலை, மதியம், இரவு நேரங்களில் பேருந்துகளில் சென்று வருகிறனர்.இங்கு, மேம்பாலத்தின் கீழே, செங்கல்பட்டு நகர போலீசார் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன் புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டு, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.தற்போது, புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபடுவது இல்லை என, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த பகுதியை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனம் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். பெண்கள் பேருத்துக்காக காத்திருக்கும் போது, இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.வாகனங்கள் சாலையை கடக்கும் போது, அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வாக்குவாதங்கள் எழுகின்றன.இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால், திருட்டு பயமும் உள்ளது. முதல்வர், ஆளுனர் உள்ளிட்டோர் செல்லும் நேரங்களில் மட்டும், போலீசார் இந்த பகுதியில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சில நேரங்களில், ஊர்காவல் படையை சேர்ந்த ஒருவர் பணியில் உள்ளார். இரவு நேரங்களில், பெரும்பாலும் புறநகர் காவல் நிலைய அறை பூட்டப்பட்டே உள்ளது.எனவே, அந்த பகுதியில் பழுதடைந்து உள்ள மின் விளக்குகளை பழுது நீக்க வேண்டும். புறக்காவல் நிலையத்தில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை