உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மயங்கி விழுந்து மேற்கு வங்க நபர் உயிரிழப்பு

 மயங்கி விழுந்து மேற்கு வங்க நபர் உயிரிழப்பு

சிங்கபெருமாள் கோவில்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷேக் மொர்டுஜோ, 53. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள, அரேபியா சீ புட்ஸ் என்ற உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஷேக் மொர்டுஜோவை பரிசோதனை செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அவர் ஏற்கனவே நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சிங்கபெருமாள் கோவில் போலீசார், ஷேக் மொர்டுஜோ உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை