பெருக்கரணையில் புதிதாக நிழற்குடை அமைக்கப்படுமா?
சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில், கயப்பாக்கம் - அச்சிறுபாக்கம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. சூணாம்பேடு, மதுராந்தகம், அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை பழுதடைந்து உள்ளது. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் வெயில் மற்றும் மழையில் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பெருக்கரணையில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - மு.கதிரேசன், சூணாம்பேடு.