10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் சீயோன் பள்ளிகள் சாதனை
சேலையூர்:சேலையூர், மாடம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சீயோன் பள்ளி செயல்படுகிறது.இவற்றில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 749 மாணவ - மாணவியரும், பிளஸ் 1 தேர்வு எழுதிய 1,014 மாணவ - மாணவியரும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.சேலையூர் பள்ளியைச் சேர்ந்த 10வகுப்பு மாணவர்கள், ஜெரால்டு ரூபன் - 500க்கும் 498 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் இடம் பிடித்தார். அதேபோல் ஆல்வின் - 496; டெபோரா ஜியோன் - 495; ருத்ரேஸ்வரன் - 495 ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.பிளஸ் 1 மாணவர்கள் ராம் பாலாஜி - 600க்கு 597 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். நரேன் சந்தோஷ் - 587, பெனிட்டா தாமஸ் - 585 மதிப்பெண்கள் பெற்று, அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.அதேபோல் செம்பாக்கம் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள், வேலாஷினி - 495, பாவனா - 494, ஐஸ்வர்யா மற்றும் நிஹா மெர்சா - 493 மதிப்பெண்கள் பெற்றனர். பிளஸ் 1 தேர்வில் பிரிதிங்கா சாய் - 595, சிவரஞ்சனி - 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மாடம்பாக்கம் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள், முகமத் ஆரிஸ் - 494; லோகப்ரியா - 490; முகேஷ் - 489 மதிப்பெண்கள் பெற்றனர். பிளஸ் 1 தேர்வில் கிருஷ்ணபிரியா மற்றும் மகாலஷ்மி தலா 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சீயோன் மெட்ரிக்குலேஷன் குழும பள்ளிகளில், 10ம் வகுப்பில் வெவ்வேறு பாடங்களில், 83 பேர்; பிளஸ் 1ல் 55 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர்.இம்மாணவர்கள், சீயோன் குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களை, சீயோன் குழும பள்ளிகளின் தலைவர் விஜயன் பாராட்டினார்.