எர்ணாவூரில் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர், மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை கொண்டு வர கோரியும், சென்னை, எர்ணாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், பகுதி செயலர் கதிர்வேல், பகுதி குழு உறுப்பினர் வெங்கட்டையா உள்ளிட்ட, 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.