உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / --யு - 25 மாவட்ட கிரிக்கெட் போட்டி காலிறுதியில் செங்கை அணி வெற்றி

--யு - 25 மாவட்ட கிரிக்கெட் போட்டி காலிறுதியில் செங்கை அணி வெற்றி

சென்னை:மாவட்டங்களுக்கு இடையிலான 25 வயதுக்கு உட்பட்ட 'யு - 25' கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில், செங்கல்பட்டு மாவட்டம், 67 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சிபுரம் அணியை தோற்கடித்தது. டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான யு - 25 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், நெல்லையில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த செங்கல்பட்டு அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 257 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, 41.1 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 190 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் செங்கல்பட்டு அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், திண்டுக்கலில் நடந்த காலிறுதியில், நாமக்கல் அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 206 ரன்களை அடித்தது. அணியின் வீரர் கவீஷ், 148 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 113 ரன்களை அடித்தார். அடுத்த பேட்டிங் செய்த, திருவண்ணாமலை அணி, 39.2 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 97 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை