1,200 பேர் வேலைக்கு விண்ணப்பம்
பிராட்வே,:தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், வடசென்னையில் வசிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி முகாம், பிராட்வே, பிரகாசம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில், நடந்தது.இந்த திறன் பயிற்சி முகாமில், எம்.ஆர்.எப்., - டி.வி.எஸ்., லுாக்காஸ் - முருகப்பா, டெக் மகேந்திரா, அசோக் லேலாண்ட், சதர்லேண்ட் குளோபல் சர்வீஸ், எல்.ஜி., - பூர்வீகா மொபைல்ஸ் உள்ளிட்ட, 23 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.இதில், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு 20 பேரும்; சதர்லேண்ட் - 45 பேரும்; எல்.ஐ.சி., - 20 பேரும்; பூர்விகா - 25 பேரும்; நிக்கோலா பவுண்டேஷன் - 180 பேரும்; முருகப்பா குரூப்ஸ் - 108 பேரும்; டெக் மகேந்திரா - 90 பேர் என, 1,200க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தனர்.