உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரஷர் ஆப்பரேட்டர் இறப்பு ரூ.36.02 லட்சம் இழப்பீடு

கிரஷர் ஆப்பரேட்டர் இறப்பு ரூ.36.02 லட்சம் இழப்பீடு

சென்னை, தனியார் குவாரி கிரஷர் ஆப்பரேட்டரான மணிகண்டன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் - வடலுார் சாலை நல்லம்பாக்கம் அருகே, 2020, டிச., 12ல் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.நல்லம்பாக்கம் கிரஷர் சாலை சந்திப்பு அருகே, அதே வழித்தடத்தில் சென்ற மினி லாரி, மணிகண்டன் இருசக்கர வாகனம் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்க்க முயற்சித்த நிலையில் இறந்தார்.மணிகண்டனின் இறப்புக்கு 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது மனைவி மகாலட்சுமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'இருசக்கர வாகனத்தில், அதிவேகமாக வந்து மோதியதாலே இறப்பு ஏற்பட்டது என்பது ஏற்புடையது அல்ல.'அதிவேகம், அஜாக்கிரதையாக, லாரியை ஓட்டுனர் இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம். எனவே, மனுதாரருக்கு 36.02 லட்சம்ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீதவட்டியுடன், தி ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ