உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சார ரயில் சேவை செங்கை தடத்தில் மாற்றம்

மின்சார ரயில் சேவை செங்கை தடத்தில் மாற்றம்

சென்னை, ரயில்பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு ரயில்வே யார்டில் இன்று முதல் ஜூன் 4ம் தேதி வரை காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மேம்பாட்டு பணி நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதன்படி, கடற்கரை - செங்கல்பட்டு காலை 9:30, காலை 10:56, காலை 11:40, நண்பகல் 12:40 மணி ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டு - கடற்கரை காலை 11:30, மதியம் 1:00, மதியம் 1:45, மாலை 3:05 மணி ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் இருந்து புறப்பட்டு செல்லும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ