உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரக்கோணம் எஸ்.ஐ., ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

அரக்கோணம் எஸ்.ஐ., ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

அரக்கோணம்,ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராகவன், 52. இவர் திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள கடைக்கு செல்ல, அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தை ராகவன் கடந்தார். இரண்டாவது நடைமேடை தண்டவாளத்தை கடந்த போது, அவ்வழியாக சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்