பார்வையற்றோர் வாலிபால்: எம்.சி.சி., கல்லுாரி முதலிடம்
சென்னை, லயோலா கல்லுாரியின் நிறுவனர் 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 90வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.இதில், பார்வையற்றோருக்கான வாலிபால் போட்டி, நேற்று நடந்தது. எம்.சி.சி., - லயோலா, பிரசிடென்சி ஆகிய அணிகள் மோதின. அனைத்து போட்டிகள் முடிவில், எம்.சி.சி., - பிரசிடென்சி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.விறுவிறுபான இறுதிப் போட்டியில், 3 - 0 என்ற செட் கணக்கில் எம்.சி.சி., அணி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்தை லயோலா கல்லுாரி அணி கைப்பற்றியது.