உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில்களில் திருடிய சிறுவன் கைது

கோவில்களில் திருடிய சிறுவன் கைது

செம்பியம், செம்பியம் சுற்றுவட்டார பகுதியில், கடந்த மாதம் பெட்டிக்கடை மற்றும் இரண்டு பிள்ளையார் கோவில்களின் பூட்டுடைத்து, 2,000 ரூபாய் திருடு போனது. செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'சிசிடிவி' காட்சிகள் வாயிலாக விசாரித்தனர்.இதில், மூன்று இடங்களில் பூட்டுடைத்து திருடியது, செங்குன்றத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிந்தது. நேற்று முன்தினம் போலீசார், சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி