கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு
கவுன்சிலர்களுக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியின் மண்டலங்கள், 15ல் இருந்து 20 ஆக அதிகரித்துள்ளது. இதில், மணலி மண்டலம், திருவொற்றியூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அம்மண்டல தலைவரின் பதவி பறிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேநேரம், நிலைக்குழு தலைவர்களில் சிலர் மண்டல தலைவர்களாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்படும் நிலைக்குழு காலிப்பணியிடத்தில், மணலி மண்டலத் தலைவராக இருக்கும் ஆறுமுகத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதய சூழலில் மண்டல விரிவாக்கம், பதவிக்காக காத்திருக்கும் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.