டெங்கு காய்ச்சல் பாதிப்பு கர்ப்பிணி போலீஸ் சீரியஸ்
சென்னை, அண்ணா நகர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மேனகா, 26; சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.கர்ப்பிணியான இவர், காய்ச்சல் காரணமாக அமைந்தகரை மகப்பேறு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.பின், மேல் சிகிச்சைக்காக, 31ல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக, டெங்கு காய்ச்சல் வார்டிற்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், திடீரென வலிப்பு ஏற்பட்டதில் மூளை வீக்கம் அடைந்து, சுயநினைவிழந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.