உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடமாநில நபரிடம் ரூ.15,000 அபேஸ்

வடமாநில நபரிடம் ரூ.15,000 அபேஸ்

பெரம்பூர்:பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குமார், 26. இவர், ராமநாதபுரத்தில் உள்ள சிமென்ட் கற்கள் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.சொந்த ஊருக்கு செல்ல, நேற்று காலை 9:00 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்த அவரிடம், மர்மநபர் ஒருவர் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, அருகே உள்ள முரசொலி மாறன் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு அவரை ஏமாற்றி, 15,000 ரூபாயையும், 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்து மாயமானார்.இதுகுறித்து, குமார் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை