உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கக் கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீஞ்சூர்:வங்கக்கடலில் நேற்று ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சூழல் உள்ளது.இன்று ஒடிசா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தமிழக கடலோரப் பகுதிகளில், 35 - 45 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இடை இடையே, 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.நேற்று மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகத்தில், 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ