உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

மடிப்பாக்கம், தரமணி, பாரதி நகரைச்சேர்ந்தவர் அசோக்குமார்,45; இருசக்கர வாகனத்தில் வளையல்வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம், புழுதிவாக்கம், கணேஷ்நகர் விரிவு பகுதியில் வியாபாரத்திற்கு சென்றபோது, சாலையில் நடந்து சென்ற 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர், திடீரென மயங்கி விழுந்தார்.அவரை மீட்ட அசோக்குமார், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, முதியவர் இறந்தார். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை