நடைபாதை வசதிகளுடன் குளம் மேம்படுமா?
மாடம்பாக்கம்:சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில், தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தில் பதிக்கப்பட்ட படிக்கட்டுகள் சரிந்துள்ளன.குளத்து நீரில் பிளாஸ்டிக், குப்பை தேங்கியுள்ளது. கரையிலும் குப்பைமயமாகவே காணப்படுகிறது. இது, கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குளத்தை சீரமைத்து, கரையை பூங்காவாக மாற்றினால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக இருக்கும் என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.