உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளிய மரத்தில் மோதிய ஆம்னி பஸ் 2 சிறுமியர் உட்பட 13 பேர் காயம்

புளிய மரத்தில் மோதிய ஆம்னி பஸ் 2 சிறுமியர் உட்பட 13 பேர் காயம்

செங்கல்பட்டு, பட்டுக்கோட்டையில் இருந்து, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, கோயம்பேடு நோக்கி, நேற்று காலை 'ஸ்ரீமுத்துலட்சுமி டிராவல்ஸ்' எனும் தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது.பேருந்தை, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், 35, என்பவர் ஓட்டினார். மாமல்லபுரம் -- செங்கல்பட்டு சாலையில், நெம்மேலி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் நிற்கும் புளியமரத்தில் வேகமாக மோதியது.இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த தீட்சிதா, 13, எழிலரசி, 13, ஆகிய இரண்டு சிறுமியருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர்கள் உட்பட 13 பேருக்கு காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி