உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனுக்கு தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு

சிறுவனுக்கு தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு

சென்னை, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த், 27. இவர், கடந்த 2020 செப்., 25ல், அதே பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,'குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, தமிழக அரசு இழப்பீடாக 3.05 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை