மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு
நங்கநல்லுார் கடைக்கு சென்ற மூதாட்டியிடம், 3 சவரன் செயின் பறித்து, பைக்கில் தப்பிச்சென்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர். நங்கநல்லூர், 11வது தெருவைச் சேர்ந்தவர் வைதேகி, 83, இவர், நேற்று மாலை, வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தார். மூதாட்டி கூச்சலிடவே, அவ்வழியே சென்று கொண்டிருந்தோர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர், மின்னல் வேகத்தில் அங்கிருந்த தப்பினார். மூதாட்டி புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு, மர்ம நபரை தேடி வருகின்றனர்.