உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் ரவுடியிசம் 5 பேர் கைது

போதையில் ரவுடியிசம் 5 பேர் கைது

சென்னை, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பவுடர் மில்ஸ் சாலையில், நேற்று காலை 8:00 மணியளவில், சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு, அவ்வழியாக சென்ற மக்களுக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.தனிப்படை போலீசார் ஐந்து பேரையும் மடக்கி பிடித்து, பேசின் பிரிட்ஜ் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு, சிவராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்த அன்பு என்ற இளஞ்செழியன், 21, பார்த்திபன், 22, பிரவீன் ராஜ், 19, சுதேசி, 19, சஞ்சய், 23, என்பது தெரிந்தது. ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை