உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடிகளிடையே மோதல் இருதரப்பில் 5 பேர் கைது

ரவுடிகளிடையே மோதல் இருதரப்பில் 5 பேர் கைது

திரு.வி.க.,நகர்: சமரச பேச்சின்போது, ரவுடிகளிடையே ஏற்பட்ட இருதரப்பு மோதல் தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கொளத்துார், பெரியார் நகர், பூம்புகார் நகர் முதல் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன், 24. ரவுடியாக வலம் வரும் இவர் மீது, இரண்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பரான, பெரம்பூரைச் சேர்ந்த முகமது அப்ரோஸ், 24, என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான், 2,4 மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே, முன்விரோதம் இருந்துள்ளது. ரவுடி மிதுன், தனது கூட்டாளிகளுடன் சென்று, அப்ரோசுக்கு சாதகமாக, முகமது இம்ரானிடம் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது. இதில், முகமது இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளான உமர், 19, சலீமுல்லா, 22, அக்ரம்கான், 23, அமர், 18, லிங்கேஸ்வரன், 21, உட்பட சிலர், ரவுடி மிதுனை சரமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த காயத்துடன் ரவுடி மிதுன் அருகே உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகமது இம்ரான் தரப்பில் தலையில் காயமடைந்த லிங்கேஷ்வரனும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிந்து, முகமது இம்ரான், உமர், சலீமுல்லா, அக்ரம்கான், மற்றும் மிதுன் தரப்பில் வசந்த், 21, ஆகியோரை கைது செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி