உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் வைத்திருந்த 8 சவரன் நகை மாயம்

வீட்டில் வைத்திருந்த 8 சவரன் நகை மாயம்

சேலையூர்: வீட்டில் வைத்திருந்த ௮ சவரன் நகை மாயமானதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலையூரை அடுத்த திருவஞ்சேரி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின். அவரது மனைவி லிஷ்சி, 64. இங்கு, கணவன் - மனைவி இருவரும், கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். லிஷ்சி தனது இரு மோதிரங்கள், கம்மல் என, எட்டு சவரன் நகையை, சிறிய பெட்டியில் வைத்து, அதை படுக்கையறையில் உள்ள மேஜை மீது வைத்திருந்தார். நேற்று முன்தினம் பார்த்தபோது, நகைகள் வைத்திருந்த பெட்டி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீடு முழுதும் தேடியும் கிடைக்காததால், இது குறித்து, சேலையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !