உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கல்பட்டில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி பலி

செங்கல்பட்டில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி பலி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலமையூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 45. இவரது மகள் தர்ஷினி, 9. கடந்த 24ம் தேதி இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, பாம்பு கடித்தது. அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை