உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்ணை கவ்வ காத்திருக்கும் மின் மாற்றி

மண்ணை கவ்வ காத்திருக்கும் மின் மாற்றி

மணலிபுதுநகர் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், நாப்பாளையம் முதல் இடையஞ்சாவடி செல்லும் பிரதான சாலையில், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி ஒன்று, சாய்ந்த நிலையில் உள்ளது.அந்த இடம், நீரோட்டம் மிகுந்த இடம் என்பதால், எந்நேரமும் மண் அரிப்பு ஏற்பட்டு, மின்மாற்றி மண்ணை கவ்வ நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின் மாற்றியை சீரமைக்க வேண்டும்.- கே.பாலு, 47, மணலிபுதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை