உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

கொளத்துார், எண்ணுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 24. இவர், வழிப்பறி வழக்கில், 2019ம் ஆண்டு ராஜமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமினில் வெளியே வந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடித்து ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.இதையடுத்து, எண்ணுாரில் தலைமறைவாக இருந்த ஹரிஹரனை, ராஜமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை