உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., பொதுச்செயலர் விதி உருவாக்கியது எம்.ஜி.ஆர்.,

அ.தி.மு.க., பொதுச்செயலர் விதி உருவாக்கியது எம்.ஜி.ஆர்.,

சென்னை, 'அடிப்படை உறுப்பினர்கள் தான், அ.தி.மு.க., பொதுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை உருவாக்கியது எம்.ஜி.ஆர்., தான்' என, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது அறிக்கை:சினிமாவை பொழுதுபோக்காக கருதிய காலத்தில், அதை போர் கருவியாக மாற்றி, மக்களுக்கு எம்.ஜி.ஆர்., விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.'ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..., பதவி வரும்போது பணிவு வர வேண்டும் தோழா...' போன்ற எம்.ஜி.ஆரின் சினிமா பட பாடல்கள், இன்றைக்கும் பொருந்துகின்றன. அ.தி.மு.க., உருவானபோது, அண்ணாதுரையின் வழியில் கட்சி விதிகளை உருவாக்கினார்.ஆனால், 43வது விதியில் மட்டும், 'அ..தி.மு.க., சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், கட்சியின் பொதுச்செயலரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றவோ, திருத்தவோ முடியாது' எனக் கூறப்பட்டிருந்தது.இதுபற்றி, எம்.ஜி.ஆரிடம் நான் கேட்டபோது, அதற்கான காரணத்தை விளக்கினார். இதை நேரம் வரும்போது நிச்சயம் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சொல்வேன். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை, மனிதநேய நாளாக கொண்டாடி மகிழ்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ