பின்டெக் சிட்டியில் ஏக்கர் ரூ.65 கோடிக்கு ஏலம்
சென்னை, உள்நாடு, பன்னாட்டு தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள், வங்கி, நிதிச்சேவை, காப்பீடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.இதற்காக, சென்னை நந்தம்பாக்கத்தில் முதல் கட்டமாக, 56 ஏக்கரில், 83 கோடி ரூபாய் செலவில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரத்தை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைத்து வருகிறது. அங்குள்ள நிலங்கள், நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. நிதிநுட்ப நகரில் உள்ள மனைகள் ஏல டெண்டர் முறையில், 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் பணி துவங்கியுள்ளது. இதுவரை, 1.70 ஏக்கர், 1.56 ஏக்கர், 2.82 ஏக்கர், 2.75 ஏக்கர், 2.58 ஏக்கர் என ஐந்து மனைகள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதை தொடர்ந்து, 2.75 ஏக்கர், 2.58 ஏக்கர் உடைய இரு மனைகளை ஏக்கருக்கு, 56 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து, ஏலம் கோரப்பட்டது.அதில் பங்கேற்ற நிறுவனங்களில் ஒரு மனைக்கு, 'ஈக்விடாஸ்' நிறுவனமும், மற்றொரு மனைக்கு, ஸ்ரீபெரும்புதுார் மெட்ரோ புராப்பர்டீஸ் அண்டு லாஜிஸ்டிக் இந்தியா நிறுவனமும் தேர்வாகியுள்ளன. ஒரு மனையில் ஏக்கருக்கு, 56.25 கோடி ரூபாயும், மற்றொரு மனையில் ஏக்கருக்கு, 65 கோடி ரூபாயும் டிட்கோவுக்கு விலை கிடைத்துள்ளது.