உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளூரில் தடகளம் செப்., 2ல் துவக்கம்

திருவள்ளூரில் தடகளம் செப்., 2ல் துவக்கம்

சென்னை, திருவள்ளூர் மாவட்ட தடகள போட்டி, வரும் 2ம் தேதி துவங்குகிறது. திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு திடலில், வரும் 2ல் துவங்கி, இரண்டு நாள் நடக்கிறது. மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். வெற்றி பெறும் 250 வீரர் - வீராங்கனையர், செப்., 19, 20, 21ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்க உள்ள மாநில தடகள போட்டிக்கு தகுதி பெறுவர் என, சங்க தலைவர் மோகன்பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை